வெள்ளி, 16 ஜனவரி, 2015

32 அறங்கள்

மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்

1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல் : நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளித்தல்

2) ஓதுவார்க்கு உணவு : கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளித்தால்

3) மாந்தர்க்கு உணவு : சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குதல்

4) பசுவுக்கு வாயுறை : பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றை போஷித்து உணவளித்தல்

5) சிறைச்சோறு : சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளித்தல்

6) ஐயம் : இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்தல்

7) வழிப்போக்கர்க்கு உதவுவதல் : வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசி தீர்த்தல்

8) அறவைச் சோறு : ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்

9) மகப்பேறுவித்தல் : பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்

10) மகவு வளர்த்தல் : குழந்தைகளை பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்

11) மகப்பால் வார்த்தல் : தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல்

12) அறிவைப் பிணம் சுடுதல் : அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்

13) அறவைத் தூரியம் : ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்

14) சுண்ணம் : தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்

15) நோய்மருந்து : நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்

16) வண்ணார் : ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல், அவர்கள் 
ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுதல் (வண்ணார்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தந்துவிடவேண்டும். தாமதிக்ககூடாது.)

17) நாவிதர் : ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.)

18) கண்ணாடி : ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரி செய்துகொள்ள கண்ணாடி கொடுத்து உதவுதல்


19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்

20) கண்மருந்து : பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ள கண்மை அளித்தல்

21) தலைக்கு எண்ணை : பரட்டை தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணை வாங்கி கொடுத்தல்

22) பெண் போகம் : தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரிய தனியிடம் அமைத்து தருதல்

23) பிறர் துயர் தீர்த்தல் : காயமோ நோயோ ஏற்பட்டு துன்பப்படுபவர்களுக்கு உதவுதல்

24) தண்ணீர் பந்தல் : தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்

25) மடம் : வழிப்போக்கர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையை தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல்

26) தடம் : வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாற குளம் தோண்டுதல், அவற்றை பராமரித்தல்

27) சோலை : நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல்

28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல்

29) ஏறு விடுதல் : பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளை கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்

30) விலங்கிற்கு உணவு : பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவை கொடுத்து உதவுதல்

31) விலை கொடுத்து உயிர் காத்தல் : கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்

32) கன்னிகா தானம் : வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்.
                                                                                                   
                                                                                                         நன்றி: மகாமேரு டிரஸ்ட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக